என் கிறுக்கல்களை
கவிதைகள் என்கிறாய்
ஒப்புக்கொள்கிறேன்..
கவிதையின் காதலனும்
கவிஞன் தானே…
உன் வீட்டினுள்
புதையல் இருப்பதன்
தடயம்,
வாசலில் உன் காலணிகள்…
உன் காலணிகள்..
உன்னை தொட விடுவதில்லையாம்….
எல்லா தேவதைகளுக்கும்
அமிழ்தம்தான் உணவு..
நீ மட்டும் தான்
உணவை அமிழ்தாக்குகிறாய்…
Images:Google








